துடுப்பாட்ட செய்தி
தொடரை வென்றது நியூசீலாந்து அணி
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 06:28.17 மு.ப GMT ]
டுனெடின் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச-நியூசீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டியிலும் வங்கதேசம் படுதோல்வி தழுவியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூஸீலாந்து 2-0 என்று கைப்பற்றியது.


டாஸ் வென்று வெட்டோரி முதலில் வங்கதேச அணியை பேட் செய்ய அழைத்தார்.

தமீம், கயேஸ், அஷ்ரஃபுல், அஃப்டாப், ஷாகிப், மஹ்முதுல்லா ஆகியோர் பட்லர், டஃபி, மெக்காய் ஆகியோரிடம் ஆட்டமிழக்க வங்கதேசம் மிக மோசமான 46/6 என்ற நிலையில் இருந்தது.

ஆனால் அதன் பிறகு இளம் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிமும், நயீம் இஸ்லாமும் இணைந்து 25 ஓவர்களில் 101 ரன்களைச் சேர்த்தனர்.

அப்போது நயீம் இஸ்லாம் 81 பந்துகளில் சேர்த்த 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக விளையாடி 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் 107 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷகாதத் ஹுசைன் களமிறங்கி 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.

நியூஸீலாந்து அணியில் பட்லர் 3 விக்கெட்டுகளையும், மெக்காய், டஃபே 1 விக்கெட்டையும் கைப்பற்ற வெட்டோரி 10 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இலக்கைத் துரத்த களமிறங்கிய நியூஸீலாந்து மெக்கல்லம் விக்கெட்டை மலிவாக இழந்தது. பிறகு இங்ரம் 28 ரன்களையும், கப்தில் 32 ரன்களையும் எடுத்டனர்.

ஆனால் ராஸ் டெய்லர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் வங்கதேசப் பந்து வீச்சை, குறிப்பாக ஷ்ஃபியுல் இஸ்லாம், ராகிபுல் ஹஸன் ஆகியோர் பந்துகளை விளாசு விளாசென்று விளாசினார்.

52 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் சகிதம் அவர் 78 ரன்களைக் குவித்தார். 27.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]