துடுப்பாட்ட செய்தி
கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரை சமன் செய்தது
[ வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2012, 01:48.29 மு.ப GMT ]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

தொடர்ந்து இரு அணிகளும் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடர் நடந்தது. இத்தொடரின் இரண்டாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், முதல் ஆட்டத்தை வென்ற தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. இதனால் ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் ஸ்மித் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கீஸ்வெட்டர் அபாரமாக ஆடி 32 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் பட்லர் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 சிக்சர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ராபின் பீட்டர்சன், மோர்னே மோர்க்கெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 11 ஓவர்களில் 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அதிக இலக்கு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் அதிரடியாக ஆட முயன்ற ரிச்சர்டு லெவி, டுப்ளெஸ்சிஸ், டி வில்லியர்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் வெளியேறினர். ஓரளவு சிறப்பாக ஆடிய ஆம்லாவும் 36 ஓட்டங்களில் வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக ஆட முயன்றாலும் இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சை அடித்து ஆட அவர்களால் இயலாமல் போனது.

11 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அல்பி மோர்க்கெல் 12 ஓட்டங்களுடனும், காலிஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்வான், பிரெஸ்னன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐதராபாத் ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது கொல்கத்தா (நேரடி ஒளிபரப்பு)
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
மீண்டும் வீழ்ந்தது டெல்லி: 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்
ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை தரகர்களுக்கு 50 கோடி ரூபாய் வருவாய்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி
கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
சென்னை ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடிகிறது பெங்களூர்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:48.36 மு.ப ] []
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். [மேலும்]
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:06.49 மு.ப ] []
டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அணியின் இளம் இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். [மேலும்]
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:40.11 மு.ப ] []
சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங் கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அதிர்ச்சி தகவல் தற்போது தெரிந்துள்ளது. [மேலும்]
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 05:59.17 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:10.04 பி.ப ] []
சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் இது மிகப்பெரிய தவறு என்று ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் அன்கித் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். [மேலும்]