துடுப்பாட்ட செய்தி
டி20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை சமாளிக்குமா வங்கதேசம்
[ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 06:02.41 மு.ப GMT ]
டி20 உலகக் கிண்ண லீக் போட்டியில் இன்று நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து சுலபமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில், நான்காவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பல்லேகலேயில் இன்று நடைபெறவுள்ள டி பிரிவு லீக் ஆட்டத்தில், ராஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து

நியூசிலாந்து அணியில் திறமையான துடுப்பாட்ட வீரர்கள் நிறைய உள்ளனர். இவர்களது சமீபத்திய செயல்பாடு தான் திருப்தி அளிக்கவில்லை.

மார்டின் கப்டில், பிரண்டன் மெக்கலம், வில்லியம்சன் உள்ளிட்ட முதல்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் குவிக்கலாம். நல்ல பார்மில் உள்ள அணித்தலைவர் ராஸ் டெய்லர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சகலதுறை வீரர்களான ஜேம்ஸ் பிராங்க்ளின், ஜேக்கப் ஓரம் கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சில் டிம் சவுத்தி சாதிக்கலாம். இவருக்கு பிரேஸ்வெல், மில்ஸ், ஓரம், பிராங்க்ளின் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் எதிரணியின் ஓட்ட வேட்டையை தடுக்கலாம்.

சுழலில் அனுபவ டேனியல் வெட்டோரி இருப்பது பலம். இவருடன் இணைந்து நாதன் மெக்கலம், ஹிரா ஆகியோரும் சுழலில் அசத்தும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம்.

வங்கதேசம்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, அயர்லாந்திடம் தோல்வியடைந்தது. தமிம் இக்பால், சாகிப் அல் ஹசன், அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம், முகமது அஷ்ரபுல் ஆகியோர் துடுப்பாட்டத்தில் நம்பிக்கையளிக்கின்றனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை மொர்டசா, அப்துர் ரசாக் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இவர்களை தவிர மகமதுல்லா, ஷபியுல் இஸ்லாம், எலியாஸ் சன்னி, சித்திக் உள்ளிட்டோரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

ஆசிய மண்ணில் உலகக் கிண்ண தொடர் நடப்பது, வங்கதேச அணிக்கு சாதகமான விடயம்.

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோத இருப்பதால், இன்றைய போட்டியின் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் எலிமினேட்டர்: துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத் (நேரடி ஒளிபரப்பு)
பிரெஞ்ச் ஓபனிலிருந்து முர்ரே விலகல்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்
பெல்ஜியம் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா
ஹஸ்சி, ரெய்னாவின் அதிரடியால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சென்னை: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை (வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ]
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்]
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ]
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ]
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்]