துடுப்பாட்ட செய்தி
சதம் கடந்த மெக்கல்லம் புதிய உலக சாதனை
[ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 06:33.23 மு.ப GMT ]
டி20 உலகக் கிண்ணப்போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை மெக்கல்லத்தின் அதிரடியில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.

இதில் 123 ஓட்டங்கள் எடுத்த பிரண்டன் மெக்கலம், டி20 அரங்கில் இரண்டு முறை சதம் அடித்த முதல் வீரரானார். முன்னதாக இவர், 2010ல் அவுஸ்திரேலியாவுக்கெதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்கள் எடுத்தார்.

இது, சர்வதேச டி20 வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 8வது சதம்.

தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு லெவி (117*, எதிர்-நியூசிலாந்து, 2012)
மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (117, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007)
இலங்கையின் டில்ஷன் (104*, எதிர்-அவுஸ்திரேலியா, 2011)
இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2010)
இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன (100, எதிர்-ஜிம்பாப்வே, 2010)
ஸ்காட்லாந்தின் பெர்ரிங்டன் (100, எதிர்-வங்கதேசம், 2012)

அதிக ஓட்டங்கள்:

டி20 அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்களை பதிவு செய்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் மெக்கலம். இவர் 1500 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தலா 117 ஓட்டங்கள் எடுத்த ரிச்சர்டு லெவி (தென் ஆப்ரிக்கா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஆகியோர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். தவிர இது, டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஒரு இன்னிங்சில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள்.

அதிவேக சதம்:

இப்போட்டியில் 51 பந்தில் சதம் அடித்த மெக்கலம், டி20 அரங்கில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடம் பிடித்தார்.

முதல் மூன்று இடங்களில் லெவி (45 பந்து),கெய்ல் (50 பந்து), மெக்கலம் (50 பந்து) ஆகியோர் உள்ளார். தவிர இது, டி20 உலகக் கிண்ண அரங்கில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிவேக சதம். ஏற்கனவே 2007ல் கெய்ல் 50 பந்தில் சதம் அடித்தார்.

அதிக சிக்சர்:

வங்கதேச அணிக்கெதிராக மொத்தம் 7 சிக்சர் அடித்த நியூசிலாந்தின் மெக்கலம், சர்வதேச டி20 அரங்கில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

இதுவரை 49 போட்டியில் 64 சிக்சர் அடித்துள்ளார். இவரையடுத்து அவுஸ்திரேலியாவின் வாட்சன் (50 சிக்சர்), டேவிட் வார்னர் (46), மேற்கிந்திய தீவுகளின் கெய்ல் (43), இந்தியாவின் யுவராஜ் சிங் (41) ஆகியோர் உள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
பிராட் பந்துவீச்சில் 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
22வது முறையாக லா லிகா சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாள்
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
ஐதராபாத் ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது கொல்கத்தா
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:37.02 மு.ப ] []
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட ஏராளமான பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். [மேலும்]
ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:08.44 மு.ப ]
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்]
கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:36.29 பி.ப ] []
ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:07.42 பி.ப ] []
சூதாட்ட புகாரில் கைதான ஸ்ரீசாந்துக்கு ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் டிராவிட் எப்போதும் ஆதரவாக இருந்து வந்துள்ளார் என்று மேற்கு வங்க வீரர் ரானாதேவ் போஸ் கூறியுள்ளார். [மேலும்]
படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்?
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:42.53 மு.ப ]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]