| | | |
| |
| | | |
| |
| மென்பந்தாட்ட செய்தி |
| தரவரிசைப் பட்டியலில் 100வது இடத்தில் உள்ள ரோசலிடம் நடால் அதிர்ச்சி தோல்வி |
| [ வெள்ளிக்கிழமை, 29 யூன் 2012, 10:44.12 மு.ப GMT ] |
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரும் 11 முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நேற்றைய ஆட்டத்தில் 2-வது வீரரான ரபேல் நடால் டென்னிஸ் தரவரிசையில் 100-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீரரான லூகாஸ் ரோசலுடன் மோதினார்.
இதில் 6-7, (9/11), 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் நடாலை ரோசல் வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் நடால் 2-வது சுற்றிலேயே வெளியேற வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
நடாலை வீழ்த்திய ரோசல் இதுவரை 5 முறை மட்டுமே விம்பிள்டன் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் அவர் முதல் சுற்றுக்கு மேல் தகுதி பெற்றது இல்லை. ஆனால் இப்போது 2008 மற்றும் 2010 விம்பிள்டன் சாம்பியனான நடாலை வீழ்த்திய பெருமை பெற்றார்.
ஏற்கனவே 2005 விம்பிள்டன் போட்டியில் ஒருமுறை நடால் இதுபோல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அப்போதும் 2-வது சுற்றில் முல்லரிடம் தோற்றார். அதன்பிறகு இப்போது மிக மோசமான தோல்வியை நடால் சந்தித்து இருக்கிறார். இதில் தோற்றதன் மூலம் நடால் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஹஸ்சி, ரெய்னாவின் அதிரடியால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சென்னை: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை (வீடியோ இணைப்பு) |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:25.02 பி.ப ] [ ] |
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. [மேலும்] | | ஐ.பி.எல். தொடரிலிருந்து புனே அணி திடீர் விலகல் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:55.58 பி.ப ] |
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக இன்று அறிவித்துள்ளது. [மேலும்] | | ஐ.பி.எல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:05.29 பி.ப ] |
ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார். [மேலும்] | | இந்தியாவுடன் மோதினாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:30.28 மு.ப ] |
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஸ். [மேலும்] | | ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:33.48 மு.ப ] |
கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|