ஒலிம்பிக்ஸ் செய்தி
ஒலிம்பிக்கில் களமிறங்கும் நிறை மாத கர்ப்பிணி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 01:51.06 பி.ப GMT ]
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நுர் சூர்யானி என்ற 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பங்கேற்க உள்ளார்.

மலேசியாவை சேர்ந்தவர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நுர் சூர்யானி முகமது (வயது 29). ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும் முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார்.

10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவில் குறி வைக்கும் நுர் சூர்யானி உலக தரவரிசையில் 47வது இடம் வகிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நுர் சூர்யானி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடல்ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ஒலிம்பிக்குக்கு அனுப்புவதில் மலேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் தயக்கம் காட்டியது. இருப்பினும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதில் நுர் சூர்யானி உறுதியாக இருந்தார்.

லண்டன் செல்ல மருத்துவர்களும் அனுமதி வழங்க, தற்போது இறுதிகட்ட தயாரிப்பில் கவனமுடன் ஈடுபட்டுள்ளார். அவரை அவரது கணவர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனுபவத்தை நுர் சூர்யானி கூறியதாவது, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக நான் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது.

இதனால் எனது ஒலிம்பிக் கனவு கலைந்து விட்டதாக அதிர்ந்தேன். சரி இனி, குழந்தையை பெற்றெடுப்பதில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இந்த சூழ்நிலையில் தான் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தகுதி அடிப்படையில் ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்யப்பட்டேன்.

அதன் பின்பு தான், கர்ப்பமாக இருந்தாலும் பரவாயில்லை எந்த வழியிலாவது ஒலிம்பிக்குக்கு செல்லும் சிந்தனை எனது மனதில் உதித்தது.

என்னை பொறுத்தவரை முடியாதது என்று எதுவும் இல்லை. இதுவும் ஒரு சவால் தான். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முடிவை கைவிட்டிருந்தால், வாய்ப்புக்காக அடுத்த 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். யாருக்கு தெரியும் அடுத்த ஒலிம்பிக்குக்கு தகுதி பெறாமல் கூட போகலாம்.

எனது இலக்கு களத்தில் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும். முடிவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தங்கப்பதக்கம் வெல்வதை குறிக்கோளாக கொண்டிருந்தால், அதனால் நெருக்கடித் தான் உருவாகும்.

துப்பாக்கியில், டிரிக்கரை இழுக்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தை உதைக்குமா என்ற சுகமான சிறிய கவலையும் இருக்கிறது. எனது குழந்தை ரொம்ப அதிர்ஷ்டசாலி. இன்னும் இந்த உலகத்தை பார்க்காவிட்டாலும், அதற்குள் ஒலிம்பிக்குக்கு சென்று விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
ஐதராபாத் ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது கொல்கத்தா
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
மீண்டும் வீழ்ந்தது டெல்லி: 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்
ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை தரகர்களுக்கு 50 கோடி ரூபாய் வருவாய்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:48.36 மு.ப ] []
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். [மேலும்]
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:06.49 மு.ப ] []
டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அணியின் இளம் இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். [மேலும்]
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:40.11 மு.ப ] []
சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங் கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அதிர்ச்சி தகவல் தற்போது தெரிந்துள்ளது. [மேலும்]
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 05:59.17 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:10.04 பி.ப ] []
சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் இது மிகப்பெரிய தவறு என்று ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் அன்கித் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். [மேலும்]