துடுப்பாட்ட செய்தி
முதலிடம் பிடிக்குமா இலங்கை? தென் ஆப்ரிக்காவுடன் இன்று மோதல்
[ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 05:02.00 மு.ப GMT ]
டி20 உலகக் கிண்ண லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

இலங்கையில் நான்காவது டி20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. “சி” பிரிவில் ஜிம்பாப்வே வெளியேறிய நிலையில், இலங்கை, தென் ஆப்ரிக்கா “சூப்பர்-8” சுற்றுக்கு முன்னேறி விட்டன. இன்றைய லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.

இலங்கை:

சொந்தமண் பலத்துடன் உள்ள இலங்கை அணிக்கு முதல்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் “பார்மில்” உள்ளது கூடுதல் பலம். டில்ஷன், முனவீரா, சங்கக்காரா ஆகியோருடன் கடந்த முறை ஏமாற்றிய ஜெயவர்த்தனவும் எழுச்சி பெற்றால் நல்லது.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு களமிறங்கிய மாயச் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ், முதல் போட்டியில் 8 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார்.

இவரது பந்துவீச்சு தென் ஆப்ரிக்க அணிக்கு சவாலாக இருப்பது உறுதி. தவிர, வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, குலசேகராவும் கைகொடுக்கும் பட்சத்தில் எளிய வெற்றி பெறலாம்.

தென் ஆப்ரிக்கா:

டி20 அரங்கில் முன்னணியில் உள்ள தென் ஆப்ரிக்க அணி முதல் போட்டியில் எவ்வித சிக்கலும் இன்றி வென்றது.

தொடக்க வீரர்களான ரிச்சர்டு லெவி, ஹாசிம் ஆம்லா, அணித்தலைவர் டிவிலியர்ஸ், டுமினி, டுபிளசி மற்றும் ஆன்டாங் ஆகியோர் துடுப்பாட்டத்தில் கைகொடுக்கின்றனர். தவிர, சகலதுறை வீரர் காலிஸும் அசத்தலாம்.

எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை சாய்க்கும் திறன் படைத்த பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது தென் ஆப்ரிக்க அணியின் பலம்.

வேகத்தில் ஸ்டைன், டிசாட்சொபேயுடன், ஆல்பி மார்கல், மார்னே மார்கல் சகோதரர்கள் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக உள்ளனர். சுழலில் ராபின் பீட்டர்சன், ஜோகன் போத்தாவும் உதவுவர் எனத் தெரிகிறது.

முதலிடம்:

இரு அணிகளுமே “சூப்பர்-8” சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இதனால், தோல்வியால் எவ்வித நெருக்கடியும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும், இன்று வெல்லும் அணி, “சி” பிரிவில் முதலிடம் பெறலாம்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல்
சூதாட்டம் இறப்பிற்கு சமமானது: டிராவிட்
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையுடன் மோதப் போவது யார்? மும்பை- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!
ஐ.பி.எல். சூதாட்டத் தொடர்பில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்
பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் பொலிஸ் விசாரணை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] []
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்]
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்]
சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:48.15 மு.ப ] []
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர். [மேலும்]
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்]