துடுப்பாட்ட செய்தி
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:15.47 பி.ப GMT ]
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் கோஹ்லியின் அரைசதம் கைகொடுக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.

மூன்றாவது போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்சிற்குப் பதில் பிரஸ்னன் இடம் பெற்றார்.

இங்கிலாந்து அணிக்கு குக், பெல் இணைந்து நிதான துவக்கம் தந்தனர். பின் குக், பீட்டர்சன் தலா 17 ஓட்டங்களில் திரும்பினர். பெல் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்பு களமிறங்கிய கீஸ்வெட்டர், சமித் படேல், டென்பாக் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தனர். ரூட் 39 ஓட்டங்களும், பிரஸ்னன் 25 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஜடேஜா 3 விக்கெட்டும், அஷ்வின், இஷாந்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 28.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கம்பீர் 33 ஓட்டங்களும், யுவராஜ் சிங் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காமல் கோஹ்லி அரைசதம் கடந்து 77 ஓட்டங்களும், டோனி 10 ஓட்டங்களும் எடுத்தனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐதராபாத் ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது கொல்கத்தா (நேரடி ஒளிபரப்பு)
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
மீண்டும் வீழ்ந்தது டெல்லி: 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்
ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை தரகர்களுக்கு 50 கோடி ரூபாய் வருவாய்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி
கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
சென்னை ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடிகிறது பெங்களூர்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:48.36 மு.ப ] []
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். [மேலும்]
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:06.49 மு.ப ] []
டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அணியின் இளம் இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். [மேலும்]
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:40.11 மு.ப ] []
சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங் கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அதிர்ச்சி தகவல் தற்போது தெரிந்துள்ளது. [மேலும்]
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 05:59.17 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:10.04 பி.ப ] []
சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் இது மிகப்பெரிய தவறு என்று ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் அன்கித் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். [மேலும்]