ஏனைய விளையாட்டு செய்தி
ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை செங்கல்சூளையில் வேலை செய்யும் அவலம்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 07:05.33 மு.ப GMT ]
ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் புதுக்கோட்டையில் உள்ள கத்தக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி. இவர் கடந்த 2006ம் ஆண்டு நடந்த தோகா ஆசிய தடகள போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்ற சில மாதங்களில் அவருக்கு நடத்தப்பட்ட பாலின சோதனையில் அவரது உடம்பில் ஆண்களுக்குரிய குரோமோசோம்கள் அதிகளவில் இருப்பதால் அவர் பெண் அல்ல என்று அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.

இதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றார். அதன்பின்னர் அவரை காப்பாற்றிய அவரது தந்தை சவுந்தரராஜன் ஒரு விளையாட்டு பயிற்சிமையத்தில் அவரை சேர்த்துவிட்டார். அதன் பின்னர் அந்த வேலையும் சரியாக இல்லாததால் 2010ம் ஆண்டிலிருந்து வேலையில்லாமல் இருந்தார்.

தற்போது மூன்று மாதங்களாக செங்கல் சூளையில் தினக்கூலியாக ரூ. 200 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவரது பெற்றோர்களும் செங்கல் சூளையில் தினக்கூலிகளாகவே உள்ளனர்.

இவரைப் போலவே கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கேஸ்டர் சிமென்யா என்ற பெண்ணுக்கும் ஆண் குரோமோசோம்கள் அதிகளவு இருப்பதாக புகார் எழுந்ததைத் தொடரந்து அவருக்கும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த பெண்ணுக்கு அவளது நாடு ஆதரவாக செயல்பட்டு போராடியதால் அந்தப்பெண் மீதிருந்த தடையை சர்வதேச விளையாட்டு ஆணையம் நீக்கியது. தற்போது அந்தப்பெண் லண்டன் ஒலிம்பிக்சில் அந்த நாட்டுக்கொடியை ஏந்திச் செல்லவுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக சாந்திக்கு இந்தியா எந்த ஆதரவும் தராததால் தற்போது இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் பல முறை விண்ணப்பித்தும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தடகள போட்டியில் சாதிக்க முடியும் என்கின்றார். ஆனால் தற்போது அவர் வேண்டுவது ஒரு வேலை மட்டுமே.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஹஸ்சி, ரய்னாவின் அதிரடியால் சென்னை அபார வெற்றி: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை(வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். போட்டியிலிருந்து புனே அணி திடீர் விலகல்
ஐபிஎல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது
இந்தியாவுடன் மோதுனாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
சூதாட்டம் தொடர்பாக சண்டிலாவுக்கு குரல் சோதனை
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
ஐஸ் ஹொக்கி போட்டி: 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளி வென்ற சுவிஸ்!
இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:42.30 மு.ப ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:57.18 மு.ப ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 3ம் திகதி தொடங்கியது. [மேலும்]
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:28.21 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:37.49 மு.ப ] []
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள் கோடி கோடியாக பணம் அள்ளுகிறார்கள். [மேலும்]
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:17.25 மு.ப ]
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார். [மேலும்]