மென்பந்தாட்ட செய்தி
சின்சினாட்டி ஓபன்: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முர்ரே அதிர்ச்சி தோல்வி
[ சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2012, 11:29.48 மு.ப GMT ]
லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் (ஓகஸ்ட் 27ம் திகதி - செப்டெம்பர் 9ம் திகதி) தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை போட்டியாக சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது.

இதன் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பிரான்சின் ஜெரிமி சார்டியை சந்தித்தார். இதில் முர்ரே 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

“நடப்பு சாம்பியன்” அந்தஸ்துடன் களமிறங்கிய முர்ரே, சமீபத்தில் நடந்து முடிந்த லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்தார்.

மற்றொரு மூன்றாவது சுற்றுப் போட்டியில் உலகின் “நம்பர் 1” வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அவுஸ்திரேலியாவின் பெர்னார்டு டோமிக்கை சந்தித்தார். இதில் பெடரர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிக் (குரோஷியா), மார்டி பிஷ் (அமெரிக்கா), ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து), ஜுயன் மார்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவோனிச் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 3-6, 6-2, 7,5 என்ற செட் கணக்கில் ஜேர்மனியின் மோனா பார்த்தெலை போராடி வீழ்த்தினார்.

மற்ற போட்டிகளில் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), சமந்தா ஸ்டோசுர் (அவுஸ்திரேலியா) உட்பட முன்னணி வீராங்கனைகள் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர்.

ஆடவர் இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டீபனக் ஜோடி, பிரேசிலின் மார்செலோ, குரோஷியாவின் இவான் ஜோடியை சந்தித்தது.

இதில் மார்செலோ- இவான் ஜோடி 6-3, 4-6, 10-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சென்னை ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடிகிறது பெங்களூர் (நேரடி இணைப்பு)
50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்(வீடியோ இணைப்பு)
ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட்
96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்?
ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அத்லெடிகோ மாட்ரிட்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல் சூதாட்டத்தால் தம்பியைக் கடத்திக் கொன்ற பட்டதாரி வாலிபர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:52.52 மு.ப ] []
மும்பையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான். [மேலும்]
டோனியிடம் மன்னிப்பு கோரிய ஸ்ரீசாந்தின் தந்தை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:12.50 மு.ப ] []
அணித்தலைவர் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்]
சூதாட்டம் நடந்ததற்காக ஐ.பி.எல் போட்டியை நிறுத்த முடியாது: பி.சி.சி.ஐ
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:04.28 மு.ப ]
நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
டெல்லியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி(வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:25.51 பி.ப ] []
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 67வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] []
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்]