இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடியது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் உள்ள சின்ஹல்சே விளையாட்டு கழக மைதானத்தில இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் மூலம் முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி கொள்ளும் முனைப்போடு துடுப்பெடுத்தாட தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய மொகமது ஹபிஸும், தவ்பிக் உமரும் சிறப்பாக விளையாடினர். 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரசன்ன ஜெயவர்த்தன பிடியில் தவ்பீக் ஆட்டமிழந்தார்.
மொகமது ஹபிஸுடன், அசார் அலி இணை சேர்ந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர்.
பாகிஸ்தான் அணி இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவருக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரரான மொகமது ஹபிஸ் 18 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் கடந்து 172 ஓட்டங்களும், அசார் அலி 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து 92 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.








|