| | | |
| |
| | | |
| |
| மென்பந்தாட்ட செய்தி |
| தரவரிசை பட்டியலில் சானியா பின்னடைவு |
| [ செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012, 07:54.16 மு.ப GMT ] |
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா பின்னடைவைச் சந்தித்துள்ளார்.சர்வதேச டென்னிஸ் தரவரிசைக்கான பட்டியலை WTA நேற்று வெளியிட்டது.
இதில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 182வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு முன்னேறவில்லை. இதையடுத்து தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இரட்டையர் பிரிவில் இரு இடங்கள் பின்தங்கி 9வது இடத்துக்கு சென்றுள்ளார். மியாமி டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, ரஷ்யாவின் வெஸ்னினா இணை முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததே இந்த பின்னடைவுக்குக் காரணம்.
சமீபகாலமாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காத இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 12 இடங்கள் பின்னடைவு ஏற்பட்டு 197 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆடவர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 7வது இடத்திலும், ரோஹன் போபண்ணா 8வது இடத்திலும், மகேஷ் பூபதி 15வது இடத்திலும் தொடர்ந்து தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ] |
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | 4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ] |
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்] | | ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ] |
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்] | | ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ] |
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|