துடுப்பாட்ட செய்தி
இந்திய வீரர்களின் ஆட்டம் குறித்து டோனி அதிருப்தி
[ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 10:32.46 மு.ப GMT ]
இலங்கையில் நடைபெற்று வரும் டுவென்டி-20 உலக கிண்ண போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி ஆப்கானிஸ்தானை போராடி வென்றது.

முதலில் விளையாடிய இந்திய அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. வீரட் கோஹ்லி 39 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ஓட்டங்களும், ரெய்னா 33 பந்தில் 38 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 19.3 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், இந்தியா 23 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியில் முகமது 17 பந்தில் 31 ஓட்டங்களும்(2 பவுண்டரி, 2 சிக்சர்), கரீம் சாதிக் 26 ஓட்டங்களும் எடுத்தனர். எல்.பாலாஜி, யுவராஜ்சிங் தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்திய அணியால் கடைசி ஓவரில்தான் வெற்றி பெற முடிந்தது என்பது பரிதாபமே.

கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் பல சாதனைகள் படைத்து மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் திணறியே ஆப்கானிஸ்தானை வெல்ல முடிந்தது.

ஷேவாக்(10), காம்பீர்(8) ஆகியோரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதேபோல அணியின் முதன்மை பந்து வீச்சாளரான ஜாகீர்கானும் ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ஓவர் வீசி 32 ஓட்டங்களை கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்ற இயலவில்லை.

இந்திய வீரர்களின் ஆட்டம் குறித்து அணித்தலைவர் டோனி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இது சிறந்த வெற்றி இல்லை. வீரர்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அனைத்து நிலையிலும் முன்னேற்றம் தேவை.

20 ஓவர் போட்டியை பொறுத்தவரை எப்போதுமே இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கும். எதிரணி துடுப்பாட்ட வீரருக்கோ அல்லது பந்துவீச்சாளருக்கோ அன்றைய தினம் சிறப்பாக அமைந்துவிட்டால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் ஏற்படும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக ஆடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பெல்ஜியம் ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா!
ஹஸ்சி, ரய்னாவின் அதிரடியால் சென்னை அபார வெற்றி: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை(வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். போட்டியிலிருந்து புனே அணி திடீர் விலகல்
ஐபிஎல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது
இந்தியாவுடன் மோதுனாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
சூதாட்டம் தொடர்பாக சண்டிலாவுக்கு குரல் சோதனை
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
ஐஸ் ஹொக்கி போட்டி: 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளி வென்ற சுவிஸ்!
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:42.30 மு.ப ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:57.18 மு.ப ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 3ம் திகதி தொடங்கியது. [மேலும்]
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:28.21 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:37.49 மு.ப ] []
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள் கோடி கோடியாக பணம் அள்ளுகிறார்கள். [மேலும்]
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:17.25 மு.ப ]
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார். [மேலும்]