| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| ஜெர்சிக்கு ஸ்பான்சர் கிடைக்காததால் அரைநிர்வாணமாக விளம்பரம் செய்த பிரபல கால்பந்து அணி வீரர்கள் |
| [ புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, 11:31.00 மு.ப GMT ] |
 தங்களது அணி வீரர்களுக்கான ஜெர்சிக்கான (மேல் சட்டை) ஸ்பான்சர் யாரும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பிரிட்டன் கால்பந்து அணி ஒன்று தனது வீரர்களை சட்டை இல்லாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் முதல் தர கால்பந்து அணிகளில் ஒன்று இயோவில் கால்பந்து கிளப் அணி. சோமர்செட்டில் உள்ள இந்த அணிக்கு மேல்சட்டைக்கான ஸ்பான்சர் யாரும் கிடைக்கவில்லை. இதனால் அணி வீரர்கள் மனம் நொந்து போய் விட்டனர்.
இதையடுத்து தங்களது அணிக்கு சட்டை வாங்க ஸ்பான்சர் கிடைக்காமல் இருப்பதை வெளியுலகுக்குத் தெரிவிக்க முடிவு செய்த அணியின் மேலாளர் கேரி ஜான்சன், அத்தனை வீரர்களையும் சட்டை போடாமல் வெற்று உடம்புடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் மேலாளர் கேரி, உதவி பயிற்சியாளர் டெர்ரி ஸ்கிவெர்டன், இன்னொரு உதவிப் பயிற்சியாளர் மட்டுமே முழு உடையில் உள்ளனர். வீரர்கள் அனைவரும் காற்சட்டை மட்டும் போட்டு சட்டையில்லாமல் வெறும் உடலுடன் காணப்படுகின்றனர்.
தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் ஜெர்சிக்கான ஸ்பான்சர்ஷிப்க்கு முன்வந்துள்ளனர்.


|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ] |
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | 4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ] |
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்] | | ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ] |
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்] | | ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ] |
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்] | | விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:42.30 மு.ப ] |
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|