<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<rss version="2.0" xmlns:blogChannel="http://backend.userland.com/blogChannelModule"> 
	<channel> 
		<title>Lankasri Sports RSS Feeds - Latest News</title>
		<link>http://sport.lankasri.com/</link>
		<description>10 Latest news</description>
		<language>ta</language>
		<copyright>Copyright(c) 2005-13 Lankasri Sports</copyright>
		<pubDate>Thu, 23 May 2013 19:34:16 GMT</pubDate>
		<lastBuildDate>Thu, 23 May 2013 19:34:16 GMT</lastBuildDate>
		<webMaster>india@lankasri.com</webMaster>
		<image> 
			<title>Lankasri Sports</title>
			<url>http://sport.lankasri.com/zpimages/rss_lankasrisports.png</url>
			<link>http://sport.lankasri.com/</link>
			<width>152</width>
			<height>54</height>
			<description>10 Latest news</description>
		</image>
		<item> 
	<title>ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcS40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.</description>&lt;p&gt;&lt;P&gt;இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க ராஜஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;இந்த வெற்றிக்குப் பின்னர் ராஜஸ்தான் அணியின் கப்டன் ராகுல் டிராவிட் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த தொடரை முடித்துவிட்டு, எனது எதிர்காலம் குறித்து அணி நிர்வாகத்துடன் பேசவுள்ளேன். அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது பற்றியும் பேசுவேன்.மேலும் இளம் வீரர்களை முன்னேற்றும் பணியை தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவீர்களா? என்று கேட்டதற்கு, “அது எனக்குத் தெரியாது. இந்த தொடர்தான் எனக்கு கடைசி தொடர் என்றோ, அதற்குப் பின்னர் விளையாடக் கூடாது என்றோ சிந்திக்கவில்லை” என்றார் டிராவிட்.&lt;/P&gt;
&lt;P&gt;40 வயதான டிராவிட், கடந்த ஆண்டு றொயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து ராஜஸ்தான் றொயல்ஸ் அணியில் இணைந்தார். &lt;/P&gt;
&lt;P&gt;இந்த தொடரில் அணியை சிறப்பாக வழி நடத்தி பிளே ஆப் சுற்றில் முதல் தடையை கடந்துள்ளார். இறுதிப்போட்டிக்கான 2வது தகுதிச் சுற்றில் மும்பை அணியுடன் ராஜஸ்தான் அணி நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 17:13:15</pubDate>
	<imgURL>/photos/thumbs/rahul_dravid_01.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>ஐ.பி.எல். சூதாட்டத் தொடர்பில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcI40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</description>&lt;p&gt;&lt;P&gt;அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. &lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஆசாத் ராப் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகமடைந்த மும்பை பொலிசார், அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. ஜெய்ப்பூர் சூதாட்ட தரகரிடம் இருந்து பரிசுப் பொருட்களை பெற்றதாகவும் கூறப்பட்டது. &lt;/P&gt;
&lt;P&gt;இந்த புகார்களையடுத்து, இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அவரை ஐ.சி.சி. நீக்கியுள்ளது. ஆசாத் ராப் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அவர் மீது விளம்பர மாடல் லீனா கபூர் பாலியல் புகார் அளித்தார். &lt;/P&gt;
&lt;P&gt;திருமணம் செய்து கொள்வதாக கூறி ராப் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் கூறினார். ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிபாரிசு செய்யாத ஆத்திரத்தில் தன் மீது லீனா கபூர் புகார் கூறுவதாக ஆசாத் ராப் சமாளித்துள்ளார். &lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 16:11:39</pubDate>
	<imgURL>/photos/thumbs/asad_rauf_01.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் பொலிஸ் விசாரணை</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcy40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.</description>&lt;p&gt;&lt;P&gt;இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை பொலிசார் சந்தேகம் அடைந்தனர்.&lt;/P&gt;
&lt;P&gt;சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை பொலிசார் ஆய்வு செய்தனர்.&lt;/P&gt;
&lt;P&gt;அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர்.&lt;/P&gt;
&lt;P&gt;எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை பொலிசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று காலை சென்னை வந்த 3 மும்பை பொலிசார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர்.&lt;/P&gt;
&lt;P&gt;பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் சூதாட்ட தொடர்பில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்த பொலிசார் அவரது உறவினர் சிக்கியிருப்பதால் சீனிவாசனிடம் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர்.&lt;/P&gt;
&lt;P&gt;இன்று காலை 10 மணி முதல் சென்னை போட் கிளப்பில் உள்ள சீனிவாசனின் வீட்டில் இந்த விசாரணை நடந்தது.&lt;/P&gt;
&lt;P&gt;இதையடுத்து குருநாத் மெய்யப்பனிடமும் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு சென்றனர். அவர் அங்கு இல்லாததால் அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 14:51:22</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/srinivasan_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>ட்விட்டரால் வார்னருக்கு ரூ. 3.15 லட்சம் அபராதம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bco40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>அவுஸ்திரேலிய விளையாட்டு விமர்சகர்களுக்கெதிராக ட்விட்டர் இணையதளத்தில் கடுமையான முறையில் தகவல் பதிந்த அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு ரூ.3.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;ஐ.பி.எல் தொடரில் நடந்த ஸ்பாட் பிக்சிங் கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கட்டுரையை வெளியிட்ட அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று, அதன் அருகே வார்னரின் படத்தை பிரசுரம் செய்ததால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட செய்தியாளர்களை கடுமையாக விமர்சித்து ட்விட்டர் இணையதளத்தில் அவர் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்யப்பட்டது.&lt;/P&gt;
&lt;P&gt;இது குறித்து விசாரணை நடத்திய கிரிக்கெட் வாரியம் தனிப்பட்ட முறையில் தாக்கி தகவல் வெளியிட்ட வார்னருக்கு ரூ. 3.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக நேற்று அறிவித்தது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 13:20:14</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/players/david_warner_004.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>தங்க சப்பாத்து விருதை வென்றார் வான் பெர்சி</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>1</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bce40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்து தொடரின் இவ்வருடத்திற்கான தங்க சப்பாத்து விருதை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ராபின் வான் பெர்சி பெற்றுள்ளார்.</description>&lt;p&gt;&lt;P&gt;இரண்டாவது முறையாக அவர் இவ்விருதை அவர் பெற்றுள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;கடந்த வருடத்தில் ஆர்சனல் சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றிய ராபின் வான் பெர்சி 38 போட்டிகளில் 30 கோல்களைப் பெற்று இந்த விருதை வென்றிருந்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;இம்முறை மான்செஸ்டர் யுனைடெட் சார்பாக 38 போட்டிகளில் அவர் 26 கோல்களைப் பெற்றிருந்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;அவர் இம்முறை லிவர்பூல் அணியின் லூயிஸ் சுவராஷ் இன் 23 கோல்கள், டாட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணியின் கரத் பேலின் 21 கோல்களை முந்திக்கொண்டு அதிக கோல்களைப் பெற்றிருந்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;இம்முறை இங்கிலாந்து பிறீமியர் லீக் சாம்பியன் பட்டத்தையும் ராபின் வான் பெர்சியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியே வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/football/vanpersi_goldenboot_001.jpg&quot;&gt;&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 12:47:01</pubDate>
	<imgURL>/photos/thumbs/football/vanpersi_goldenboot_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bc440Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.</description>&lt;p&gt;&lt;P&gt;ஐ.பி.எல் தொடரின் பிளே-ஆப் சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதில் முதல் தகுதிச் சுற்று போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின.&lt;/P&gt;
&lt;P&gt;சென்னை (192/1) அணியின் இலக்கைத் துரத்திய மும்பை அணி (144/10), 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.&lt;/P&gt;
&lt;P&gt;இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் (11), ரவிந்திர ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தினேஷ் கார்த்திக், பந்து முதலில் துடுப்பாட்டத்தில் பட்டதாக சைகை தெரிவித்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்தச் செயல், ஐ.பி.எல் கிரிக்கெட் நடத்தை விதி (2.1.3) லெவல் 1ஐ மீறிய செயல் என்பதால் போட்டிக்கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 11:30:50</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/players/dinesh_karthick_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>1</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcU40Qd4e2eMM302cAmD2dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார்.</description>&lt;p&gt;&lt;P&gt;இருவரும் மும்பை தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் இணைந்து நடனமாடி, நடனப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில் இருவரும் ஸ்ரீசாந்த் சூதாட்டப் புகாரில் கைதாகும் வரை நெருக்கமாக பழகிவந்தார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு இருவரும் அப்போது காதலிப்பதகவும் வதந்தி பரவியது. ஆனால் இதை இருவரும் அப்போதே மறுத்து விட்டனர்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில்தான் ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக கைதானது தனக்கு மிகவும் அதிர்ச்சியான தகவலாக இருந்ததாக சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;அவர் இது தொடர்பாக பேசுகையில், சமீப காலமாக நான் அவருடன் தொடர்பில் இல்லை. ஆனாலும், நல்ல நண்பர்காளாகவே இருவரும் பழகி வந்தோம். ஸ்ரீசாந்த் கைது செய்தியை நான் கேன்ஸ் படவிழாவில் இருந்த போது கேள்விபட்டு மிகவும் அதிர்ந்து போனேன்.&lt;/P&gt;
&lt;P&gt;அவர் மீதான குற்றசாட்டுக்கள் என்னால் ஜீரணிக்கவே முடியாதவை. பணத்தாசை மனிதர்களை எப்படியெல்லாமோ குப்புறத் தள்ளி விடுகிறது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.&lt;/P&gt;
&lt;P&gt;ஸ்ரீசாந்த் கேரள மக்களை கிரிக்கெட்டுக்கு கொண்டுவர ஒரு உந்துதலாக இருந்தார். தற்போது அனைத்தும் வீணாகி விட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/sreesanth_survinchawla_002.jpg&quot;&gt;&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 08:39:42</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/sreesanth_survinchawla_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>வீரர்களின் செயல் ஏமாற்றத்தை அளித்தது: டிராவிட்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcK40Qd4e2eMM302cAmD2dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>எங்கள் அணி வீரர்கள் ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டது மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது என்று ராஜஸ்தான் அணி அணித்தலைவர் டிராவிட் தெரிவித்தார்.</description>&lt;p&gt;&lt;P&gt;தற்போது நடந்து வரும் ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.&lt;/P&gt;
&lt;P&gt;இதனையடுத்து, இப்பிரச்னையில் தொடர்புள்ளதாக மேலும் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில், இது குறித்து டிராவிட் கூறுகையில், எங்கள் அணியை சேர்ந்தவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது, மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த நாட்கள், எங்களுக்கு சோதனையான காலமாக அமைந்துவிட்டது.&lt;/P&gt;
&lt;P&gt;இதன் மூலம், கோபம், சோகம், ஏமாற்றம் என்று எல்லாவற்றையும் அடைந்துவிட்டோம். இதனால், மும்பை, ஐதராபாத் அணிகளுடனான போட்டியின் போது குழப்பத்துடன் இருந்தோம்.&lt;/P&gt;
&lt;P&gt;உப்டன் பயிற்சியாளராக அமைந்தது மகிழ்ச்சியான ஒன்றாகும். எங்களுக்கு சிறப்பான பயிற்சியை இவர் வழங்கினார் என்றும் வீரர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த உப்டன் மற்றும் அணி ஊழியர்களுக்கும் எங்களது நன்றிகள் எனவும் கூறினார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 07:42:16</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/players/dravid_013.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>1</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcA40Qd4e2eMM302cAmD2dde1DmU302eWAA2e4q04mbcb3lOU42</link>		<description>சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்னர் அது தோல்வியில் முடிந்த போட்டிகள் குறித்து சந்தேகம் வலுத்துள்ளது.&lt;/P&gt;
&lt;P&gt;ஏற்கனவே ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் றொயல்ஸ் வீரர்கள் பிக்ஸிங் புகாரில் சிக்கி கைதானதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி தவிர வேறு சில அணிகள் மீதும் சந்தேகம் உள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது.&lt;/P&gt;
&lt;P&gt;மேலும் மொத்தம் 15 போட்டிகளை ஆய்வு செய்து வருவதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் கூறியிருந்தார். தற்போது குருநாத் மெய்யப்பன் சிக்கியுள்ளதால், செனனை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் குறித்த சந்தேகம் வலுப்படுவதாக பேச்சு எழுந்துள்ளது.&lt;/P&gt;
&lt;P&gt;மே 5ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இண்டியன்ஸுக்கெதிரான போட்டி. முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ் 139 ஓட்டங்களை எடுத்தது. வெகு சுலபமாக எட்டக்கூடிய ஸ்கோர் என்று எதிர்பார்த்த நிலையில் வெறும் 79 ஓட்டங்களில் சென்னை சுருண்டு போனது.&lt;/P&gt;
&lt;P&gt;இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் மகா சொதப்பலாக இருந்தது. விளையாடவே மனம் இல்லாதவர்கள் போல விளையாடினர். மேலும் துடுப்பாட்ட வரிசையும் மாறிப் போயிருந்தது. வழக்கமான சென்னை ஆட்டமாக இது இல்லை.&lt;/P&gt;
&lt;P&gt;அதேபோல ராஜஸ்தான் றொயல்ஸ் அணியுடனான மே 12ம் திகதி போட்டியிலும், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உடனான மே 18ம் திகதி போட்டியிலும் மோசமாக ஆடித் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.&lt;/P&gt;
&lt;P&gt;இதெல்லாம் பிக்ஸ் செய்த போட்டிகள் என்று கூற வரவில்லை. ஆனாலும் சந்தேகக் கேஸில் இவையெல்லாம் கூட இருக்கலாமோ என்ற சந்தேகம்தான் வருகிறது.&lt;/P&gt;
&lt;P&gt;சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி மீதே பிக்ஸிங் சர்ச்சை கிளம்பியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்துப் போட்டிகளையும் விசாரணைக்குட்படுத்தும் கோரிக்கை எழலாம்.&lt;/P&gt;
&lt;P&gt;எனவே அந்த அணிக்கு சிக்கல்கள் வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.&lt;/P&gt;
&lt;P&gt;சென்னை அணி நடப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிய பின்னர், அந்த அணியின் வீரர்கள் யாரேனும் குருநாத் மெய்யப்பனின் தூண்டுதலின் பேரில் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அல்லது தொடர்பு கொண்டிருந்ததாக உறுதியானால், சென்னையின் சாம்பியன் பட்டம் பறிக்கப்படும் அபாயத்தையும் எதிர்பார்க்கலாம் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/csk_sad_001.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/csk_sad_001.jpg&quot;&gt;&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 06:57:07</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/csk_sad_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>1</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22cQ04Oc203UmD1b4e2cUOl7bcb3eWAA0dde4eMMC0bcedlOS2e4dpDmA4203dm40q42</link>		<description>ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர்.</description>&lt;p&gt;&lt;P&gt;கடந்த ஏழு நாட்களாக பொலிஸ் காவலில் உள்ள இவர்களிடம் ஸ்பெஷல் பிரிவு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/P&gt;
&lt;P&gt;இதில் வெளியான தகவல்களின் படி, கடந்த மே 5 (மும்பை-சென்னை), 9 (பஞ்சாப்-ராஜஸ்தான்), 12 (சென்னை-ராஜஸ்தான்), 15ம் திகதிகளில் (மும்பை-ராஜஸ்தான்) நடந்த போட்டிகளில் சூதாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.&lt;/P&gt;
&lt;P&gt;இதில் ஸ்பாட்-பிக்சிங் மட்டுமன்றி புதிதாக போட்டியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சூதாட்டம் நடந்துள்ளது. அதேநேரம், 12ம் திகதி போட்டியில், சண்டிலா, சவான் களமிறங்காததால் பிக்சிங் நடக்கவில்லை.&lt;/P&gt;
&lt;P&gt;மே 5 போட்டியில் விளையாடிய சண்டிலா, பிக்சிங் செய்ததுக்கு ரூ. 25 லட்சம் பெற்றார். தவிர, மே 17ம் திகதி போட்டிக்காக ரூ. 15 லட்சம் மற்றொரு புக்கியிடம் தனியாக ரூ. 9 லட்சம் என்று மொத்தம் ரூ. 49 லட்சம் வரை வாங்கியுள்ளார் சண்டிலா.&lt;/P&gt;
&lt;P&gt;இதில் சரியாக சிக்னல் கொடுக்காததால் ரூ. 20 லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளார். அடுத்து மே 15ம் திகதி இரவில் சண்டிலா கைது செய்யப்பட்டதால், 17ம் திகதி பிக்சிங் செய்யமுடியவில்லை.&lt;/P&gt;
&lt;P&gt;ஸ்ரீசாந்த் தனியாக சூதாட்ட கம்பெனி தொடங்கியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகக் கிண்ண (2011) இந்திய அணியில் இடம்பெற முடியாத சோகத்தில் (பிரவீண் காயத்தால் பின்பு இடம் கிடைத்தது) கடந்த 2010, செப்டம்பர் 29ல் எஸ் 36 என்ற இசைக்குழுவை தொடங்கினார்.&lt;/P&gt;
&lt;P&gt;அடுத்து எஸ் 36 ஸ்போர்ட்ஸ் அண்டு என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை பெங்களூரில் பதிவு செய்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;இதன் நோக்கமாக இந்தியா, வெளிநாடுகளில் கிரிக்கெட் பயிற்சி மையம் ஹெல்த் கிளப், உடற்தகுதி மையம், உள்ளரங்கு மைதானம் துவக்குவது மற்றும் பெட்டிங்கில் ஈடுபடுவது போன்றவை இருந்தது.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிறுவனத்தின் பங்கில் 74 சதவீதம் ஸ்ரீசாந்த்திடமும், 26 சதவீதம் இவரது முன்னாள் பயிற்சியாளர் சிவகுமாரிடம் இருந்தது.&lt;/P&gt;
&lt;P&gt;இது குறித்து அவர் கூறுகையில், ஓய்வுக்குப் பின் ஸ்ரீசாந்த் வெளிநாட்டில் குடியேறினால் பெட்டிங் தொழிலை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஏனெனில், இந்தியாவைத் தவிர, மற்ற நாடுகளில், இத்தொழிலுக்கு அனுமதி உள்ளது என்றார்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்த கம்பெனி மூலம் புக்கிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி ஸ்ரீசாந்த் பிக்சிங் ஈடுபட்டுள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;கடந்த மே 9ல் நடந்த பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் ஸ்ரீசாந்த் வேண்டுமென்றே நோ-பால் வீசியது தெரியவந்துள்ளது.&lt;/P&gt;
&lt;P&gt;இது தொடர்பாக புக்கி ஒருவரிடம் ஸ்ரீசாந்த் பேசுகையில், அண்ணே, நான் சொன்னபடி கடைசி பந்தை நோ-பாலாகத் தான் வீசினேன். ஆனால்,&amp;nbsp;நடுவர் கண்டுக்கல, இதற்கு நான் என்ன செய்யறது என்று கேட்டுள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;பொலிஸ் விசாரணையில் ஸ்ரீசாந்த் புதிதாக சில வீரர்களின் பெயரை வெளியிட்டுள்ளார். இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் நான்கு வீரர்களின் பெயரை ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;இதில் இருவர் வெளிநாட்டு வீரர்கள், மற்ற இருவர் வேறு அணியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கெதிராக போதிய ஆதாரங்களை தேடி வருகிறோம். விரைவில் இந்த வீரர்கள் கைதாக உள்ளனர் என்றார்.&lt;/P&gt;
&lt;P&gt;ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க முடியாது, மத்திய அரசுதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கைவிரித்து விட்டது.&lt;/P&gt;
&lt;P&gt;இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறுகையில், ஐ.பி.எல் கிரிக்கெட்டை நிறுத்த முடியாது. அதேநேரம் போட்டிகள் நேர்மையாக நடக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றார்.&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/sreesanth_betting_company_001.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/sreesanth_betting_company_002.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/sreesanth_betting_company_003.jpg&quot;&gt;&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 05:48:15</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/players/sreesanth_006.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item>
	</channel>
</rss>