டெஸ்ட் கேப்டன் கும்ளேவுக்கு முன்னாள் வீரர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் பதவி விலக வேண்டும் என்றும், இளம் தோனியை டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக்க வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெல்ஜியத்தின் புருசெல்ஸ் நகரில் உள்ள வான்டேம் நினைவு விளையாட்டு அரங்கில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில், சக நாட்டு வீரர் அசாஃபா பாவலை வென்றதன் மூலம் ஜமைக்கா வீரர் யுசைன் போல்ட் தடகளத்தில் தனது ஆதிக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரும், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும் சந்திக்கின்றனர்.
விளையாட்டால் எவ்வளவு பெருமைகள் கிடைத்தாலும், அதை செயல்படுத்துவதற்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
கிராண்ட் சிலாம் போட்டி களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ்-செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) மோதினார்கள்.
ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய சீனா, அடுத்து ஊனமுற்றோர்க்கான பாராலிம்பிக் போட்டியை நடத்த தயாராக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
சர்ச்சை நாயகன் சைமண்ட்ஸ், மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மன நல மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுவது அவருக்கு உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் மருத்துவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டார்வினில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்கதேசம் 36.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டி யான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜெலீனா ஜான் கோவிக் (செர்பியா) கால் இறுதியில் ஆஸ்திரியாவை சேர்ந்த சைபிலி பாமரை எதிர் கொண்டனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நாடல், அமெரிக்க வீரர் மார்டி ஃபிஷ், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே ஆகியோர் தகுதி பெற்றனர்.
மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடரில் 40 என முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்தில் தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகிறது. அமெரிக்க ஓபனை முதல் முறையாக வெல்லும் வேட்கையுடன் உள்ள உலகின் முதல் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால், 71-வது இடம் வகிக்கும் செர்பியாவின் விக்டோர் டிரோக்கியை எதிர்கொண்டார்.
இந்திய வீரர்களுடன் "மோதி' அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் ஆஸ்திரேலிய "ஆல்- ரவுண்டர்' ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், இப்போது தனது கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதான அணி கூட்டத்தில் பங்கேற்காமல் மீன் பிடிக்கச் சென்றதால், தொடரிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார் அவர்.
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் நேற்று நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 2-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.ஆண்கள் பிரிவில் உலகின் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) பிரேசில் வீரர் அல்பேசை 6-3, 7-5, 6-4 என்ற செட்டில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 2-வது சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால்(ஸ்பெயின்)அமெரிக்க வீரர் டெகார்ட்டை 6-1, 6-2,6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
உலகம் வியக்கும் வண்ணம் கோடைகால ஒலிம்பிக் போட்டியை பிரமாண்டமாக நடத்திமுடித்துள்ள சீனா, அடுத்து 13-வது ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியை நடத்தத் தயாராகி வருகிறது. பெய்ஜிங்கில செப்டம்பர் 6-ம்தேதி முதல் 17-ம்தேதி வரை அப் போட்டி நடைபெற உள்ளது.