ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். "பாங்க் ஆஃப் தி வெஸ்ட் டென்னிஸ்' போட்டி கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங் லேயில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 203 ரன்னில் சுருண்டது. பீட்டர்சன் அதிக பட்சமாக 45 ரன் எடுத்தார். ஸ்டெய்ன், மார்கல் ஆகியோர் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக லீட்ஸ் நகரில் துவங்கிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு சுருண்டது. நேற்று துவங்கிய இப்போட்டியில், பூவா-தலையா வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய முகமது ஆசிஃப் கிரிக்கெட்டில் இருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஸ்டான்ஃபோர்டில் நடைபெறும் பேங்க் ஆஃப் வெஸ்ட் கிளாசிக் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் அதிகம் அறியப்படாத பிரிட்டிஷ் வீராங்கனையிடம் நேர் செட்களில் தோல்வி தழுவி சானியா மிர்சா வெளியேறினார்.
2008 பீஜிங் ஒலிம்பிக் கால்பந்து பிரேசில் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் ரொனால்டினோ, பார்சிலோனா கிளப் தன்னை ஒலிம்பிக் போட்டிகளுக்குக் அனுமதிக்கவில்லை எனில் அந்த கிளப்புடனான ஒப்பந்தத்தை முறித்து கொள்வேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தோல்வி தழுவிய போதிலும் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. 2 நாட்கள் பந்து வீசியும் பஞ்சுப்பொதி போன்ற ஆட்டக்களத்தில் வெறும் 3 தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளையே இங்கிலாந்தால் வீழ்த்த முடிந்தது.
முதலாவது இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 18-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை இந்தியாவில் நடந்தது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த போட்டி மெகா வரவேற்பை பெற்றது.
ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் விளையாடிய ஒரு வீரர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்டில் "பாலோஆன்' பெற்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டாம் இன்னிங்சில் உறுதியான துவக்கம் கண்டது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் தாக்குப்பிடித்தால் மட்டுமே தோல்வியில் இருந்து தப்ப முடியும். நேற்று இங்கிலாந்து பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பீட்டர்சன் அபார சதத்தால் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன் குவித்துள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்யகேட்டுக் கொண்டது.
சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.
பிரேசில் வீரர் ரொனால்டினோவை பீஜிங் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கு அனுப்ப முடியாது என்று அவர் விளையாடி வரும் ஸ்பெயின் கால்பந்து லீக் கிளப் பார்சிலோனா தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நோக்கத்துடன் பிரேசில் அணியில் ரொனால்டினோ, ருபீனோ ஆகிய மூத்த வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
விம்பிள்டன் சாம்பியன் ரஃபேல் நாடல் ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்டில் நடைபெறும் மெர்சிடஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முழங்கால் காயம் காரணமாக மருத்துவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது என்று அறிவுரை வழங்கியுள்ளதால் ஏமாற்றத்துடன் இந்த விலகல் அறிவிப்பை செய்வதாக நாடல் தெரிவித்துள்ளார்.
இலங்கை செல்லும் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி விலகியதால் விரேந்திர சேவாக் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ளே தலைவராக நீடிக்கிறார். இன்று அறிவிக்கப்பட்ட கும்ளே தலைமையிலான 16 வீரகள் கொண்ட அணியில் ரோஹித் ஷர்மாவும், புதிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் மணிக்கட்டு காயம் அடைந்த ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 341 ரன் குவித்தது.
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் மோதினார்கள்.