வொர்ஸ்டர்ஷயர் மைதானத்தில் ஆஸ்ட்ரேலியாவிற்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நேற்று துவங்கிய 4 நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணியின் விசித்திர பந்து வீச்சு முறை கொண்ட வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு 20- 20 கிரிக்கெட் தொடரில் விளையாட டாஸ்மேனியா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தோற்றுவிடுவாரோ என்ற நிலையில் இருந்த போட்டியில், மீண்டு எழுந்து, திறம்பட ஆடி, போராடி வென்று விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் இறுதிக்கு முன்னேறினார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், ஜெர்மனி வீரர் டாமி ஹாஸும் முன்னேறியுள்ளனர்.
வரும் அக்டோபர்-நவம்பரில் இந்தியாவிற்கும் ஆஸ்ட்ரேலியாவிற்கும் இடையே நடைபெறும் 7 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் குவாஹாத்தியி ஒரு போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் ஒரு வருடத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்படும் என சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தலைவர் டேவிட் மோர்கன் தெரிவித்துள்ளார். இதன்படி டெஸ்ட் போட்டிகள் 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டர்.
"சானியா மிர்சா மிகப் பிரபலமாக இருக்கலாம். ஆனால் செயல்பாட்டின் அடிப்படையில் பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா நேவல் தான் மிகச் சிறந்த சாதனையாளர்,'' என, பிரகாஷ் படுகோனே தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அமெரிக்காவின் வீனஸ் வில்லிம்ஸ், ரஷ்யாவின் டினரா சபினா ஆகியோர் தகுதி பெற்றனர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.
ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் முழு உடல் தகுதி பெற்றார்.
இந்திய அணியின் முன்னாள் உடற்கோப்பு பயிற்சியாளர் ஜான் குளோஸ்டர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொட்ரருக்கு நெருக்கமாக ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்கள் இருந்தால் இந்திய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து விலக தயங்கக் கூடாது ஏனெனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அழுத்தம் மனச் சோர்வை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸ் மல்யுத்த தொடரில் இந்தியாவின் "ஒலிம்பிக் வெண்கல நாயகன்' சுஷில் குமார் தங்கம் வென்று சாதித்தார். ஜெர்மனியில் உள்ள டார்ட்மன்டில் மூன்று நாள் போட்டி கொண்ட ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸ் பிரிஸ்டைல் மற்றும் கிரிகோ ரோமன் மல்யுத்த தொடர் நடந்தது.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், நீண்ட நாட்களுக்குப் பின்னர் தாம் சிறப்பாகப் பந்துவீசியதாக வெஸ்ட்இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் தெரிவித்துள்ளார்.